‘பணம் இல்லாததால் பிணம்’ -சம்பளம் வராததால் பேராசியர் தூக்கில் தொங்கி சாவு..
இந்த நிதி நெருக்கடியில் குடும்பத்தை நடத்த முடியாமல் ஒரு கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை உருவாக்கியது .
இந்த நிதி நெருக்கடியில் குடும்பத்தை நடத்த முடியாமல் ஒரு கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை உருவாக்கியது .
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சஞ்சய்குமார் என்ற ஒரு பேராசியருக்கு அந்த கல்லூரி நிர்வாகம் 8 மாதங்களாக சம்பளம் வழங்க வில்லை .அதனால் குடும்பம் நடத்த முடியாமல் ,குடும்பத்தில் நடக்கும் சண்டையால் அந்த பேராசிரியர் திங்கள்கிழமை மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .அவர் வீட்டிலிருந்து அவர் இறப்பதற்கு முன்பு எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது
அந்த தற்கொலைக் குறிப்பில் அவர் , தனக்கு செலுத்த வேண்டிய சம்பளம் மற்றும் பிஎஃப் தொகையை அவரது மனைவியிடம் கொடுக்கப்படவேண்டும் என்று அவர் எழுதியிருந்தார் .
“நாங்கள் எங்கள் குடும்பத்தை எவ்வாறு நடத்துகிறோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். என் கணவருக்கு சுமார் 8- மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. எங்கள் குழந்தைகளின் பள்ளிப்படிப்புக்கு எங்களால் பணம் கட்ட முடியவில்லை மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வேன் என்று பலமுறை சொல்லிக்கொண்டிருந்தார் ஆனால் நான் அவரிடம் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கக்கூடாது என்று அவருக்குப் புரியவைத்தேன் , ஆனால் நான் நேற்று வீட்டில் இல்லாதபோது அவர் தற்கொலை செய்து கொண்டார் “என்று இறந்தவரின் மனைவி கூறினார்.