பணமழை கொட்டணுமா? அப்டின்னா இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க

 

பணமழை கொட்டணுமா? அப்டின்னா இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்க

பணம் வந்து குவிவதற்கு ஒரு மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தைச் சொன்னால் நீண்டநாள் வராமல் உள்ள பணம்கூட எளிதில் வந்துவிட வாய்ப்புள்ளது

இந்த உலகில் யாருக்குத்தான் பணம் தேவையில்லை. பணம் என்றால் பிணம் கூட வாயைப் பிளக்கும் என்பார்கள். ஆனால் அப்படியெல்லாம் பேராசை இல்லை. இருந்தாலும் என்ன செய்தாலும் கையில் பணம் மிஞ்சவில்லை. ஓடி ஓடி உழைத்தாலும் தேடிய பணம் சிக்கவில்லை. எதிர்பாராமல் ஏகப்பட்ட பணம் கிடைக்காதா என்ற ஏக்கம் எல்லாருக்குமே இருக்கிறது.

அப்படிப்பட்டவர்களுக்கு பணம் வந்து குவிவதற்கு ஒரு மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தைச் சொன்னால் நீண்டநாள் வராமல் உள்ள பணம்கூட எளிதில் வந்துவிட வாய்ப்புள்ளது. செவ்வாய் வெறும்வாய் என்ற சொலவடை உண்டு. ஆனால் இந்த சூட்சும மந்திரத்தை செவ்வாய்க்கிழமை மதியம் 3.30- 4.30க்குள் ஜெபிக்க வேண்டும். அதுவும் வடக்கு திசைப்பக்கமாக அமர்ந்து சொல்ல வேண்டும்.

அந்த மந்திரம்:

ஓம் ரீங் வசி வசி
தனம் பணம் தினம் தினம்

இதை ஜெபிக்கும்போது நேரே நிமிர்ந்து அமர்ந்திருக்க வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு மனதார ஆழ்ந்து நம்பிக்கையுடன் ஜெபிக்க வேண்டும். நிச்சயமாக உங்களை வந்தடைய வேண்டிய பணம் வரும். செல்வம் கைகூடும். உங்கள் காரியம் சித்தியடைய வேண்டும் என்றால் இந்த மந்திரத்தை ஓதிய பிறகு பெரிய நெல்லிக்காய் ஒன்றை கடித்துச் சாப்பிடவேண்டும். அதன் சுவையில் அறுசுவையும் கலந்திருப்பதால் அனைத்து வளங்களும் உங்களை வந்தடையும்.