பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது புதிய நோட்டுகள் அச்சடிக்க எவ்வளவு செலவு? அருண் ஜெட்லி தகவல்

 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது புதிய நோட்டுகள் அச்சடிக்க எவ்வளவு செலவு? அருண் ஜெட்லி தகவல்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது புதிய நோட்டுகள் அச்சடிக்க எவ்வளவு செலவானது என்பது குறித்த தகவலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது புதிய நோட்டுகள் அச்சடிக்க எவ்வளவு செலவானது என்பது குறித்த தகவலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்தாலும், இன்றளவும் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த போதும், அதற்கு காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஊழல் கரையான்களை ஒழிக்க பணமதிப்பிழப்பு எனும் கசப்பான மருத்து தரப்பட்டதாக கடந்த மாதம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது புதிய நோட்டுகள் அச்சடிக்க எவ்வளவு செலவானது என்பது குறித்த தகவலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட போது புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரூ.8000 கோடி செலவானதாக ஜெட்லி தெரிவித்துள்ளார்.