பணத்திற்காக 70 வயது முதியவர் கொடூர கொலை…!

 

பணத்திற்காக 70 வயது முதியவர் கொடூர கொலை…!

வீட்டுக்கு சென்ற உறவினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்திருக்கிறது, சோஃபா மீது வாமன் ஜோசி இறந்து கிடந்திருக்கிறார்.

மும்பை: 70 வயது முதியவரை கொலை செய்து 50,000 ரூபாய் பணத்தையும், தங்க நகையையும் கொள்ளை அடித்துச் சென்றிருக்கிறது ஒரு கும்பல்.

sdfzv

போரிவ்லி பகுதியில் வசித்து வந்தார் சிற்றுண்டி கடை முதலாளி வாமன் ஜோசி (70). மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்றவர் திரும்பவே இல்லை, அதனால் அவரது மகன், உறவினரை விட்டு அப்பாவை பார்க்க சொல்லியிருக்கிறான். வீட்டுக்கு சென்ற உறவினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்திருக்கிறது, சோஃபா மீது வாமன் ஜோசி இறந்து கிடந்திருக்கிறார்.

ffgdf

வீட்டுக் காவலாளி இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. முதியவரின் மகள் புனேவில் இருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாக கடை நடத்தி வரும் வாமன் ஜோசிக்கு எதிரிகள் யாரும் கிடையாது என அவரின் மகள் தெரிவித்துள்ளார்.

ssgdf

வீட்டுக் காவலாளி டீ குடிக்க செல்லும்போது இரண்டு நபர்கள் உள்ளே சென்றதை பார்த்ததாக தகவல் கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக 50 நபர்களை விசாரித்து வருகின்றனர். வீட்டில் இருந்து 50,000 ரூபாய் பணமும், தங்க நகையும் திருடுபோயுள்ளது. உறவினர்களோ அல்லது நெருங்கியவர்களோ திட்டமிட்டு இந்த செயலை செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் வாசிங்க

பெண்களை ஆபாசமாக படம் பிடித்த இளைஞருக்கு அடி, உதை; செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச படங்கள்!