பட்டினத்தார் வரிகள் விஜய் சேதுபதி குரலில்: வீடியோ

 

பட்டினத்தார் வரிகள் விஜய் சேதுபதி குரலில்: வீடியோ

ஹரிஸ் கல்யாண் நடித்துள்ள ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் வரும் பட்டினத்தார் வரிகளை விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

சென்னை: ஹரிஸ் கல்யாண் நடித்துள்ள ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் வரும் பட்டினத்தார் வரிகளை விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

விஜய் சேதுபதியை வைத்து ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்த திரைப்படம் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’. பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு ஹரிஸ் கல்யாண் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இதில் அனிருத் பாடிய கண்ணம்மா எனும் பாடல் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து ஏய் கடவுளே எனும் அடுத்த பாடல் வெளியானது. 

சாம் சிஎஸ் எழுதிய இந்தப் பாடலை ஹரிஸ் கல்யாண் பாடியுள்ளார். இதன் ஆரம்பத்தில் இடம்பெறும் பட்டினத்தார் வரிகளை விஜய் சேதுபதி பேசியுள்ளார். இது அந்த பாடலை இன்னும் சிறப்பானதாக மாற்றியுள்ளது.