பட்டாசு ஆலையில் வெடி விபத்து .. தொழிலாளி உடல் கருகி உயிரிழப்பு : தொடரும் மரணங்கள்!

 

பட்டாசு ஆலையில் வெடி விபத்து .. தொழிலாளி உடல் கருகி உயிரிழப்பு : தொடரும் மரணங்கள்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் சூரிய பிரபா என்னும் பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் சூரிய பிரபா என்னும் பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த வள்ளியம்மாள், விஜயகுமார் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முன்னதாக ஜமீன் சல்வார்பட்டியில் ரவீந்திரா என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சங்கு சக்கர பட்டாசுக்கு மருந்து செலுத்திக் கொண்டிருந்த முத்துப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வாறு தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு, தொழிலாளிகள் உயிரிழக்கின்றனர். 

ttn

இந்நிலையில் மீண்டும் ஒரு வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில், உராய்வு காரணமாக இன்று காலை  வெடி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில், ஆலைக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த குருசாமி என்ற தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தார். மேலும், ஒருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.