பட்டாசு ஆலையில் வெடி விபத்து! 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

 

பட்டாசு ஆலையில் வெடி விபத்து! 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறை கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில், உராய்வு காரணமாக இன்று காலை  வெடி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில், ஆலைக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறை கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில், உராய்வு காரணமாக இன்று காலை  வெடி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில், ஆலைக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தார். மேலும், 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து

தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாத்தூர் மற்றும் கோட்டை வெம்பக்கோட்டை தீயணைப்புத்துறையினர் பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். 

இதுபோன்று தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு, தொழிலாளிகள் உயிரிழக்கின்றனர்.