‘பட்டப்பகலில் தோசை கல்லால் அடித்து நர்சிங் சகோதரிகள் கொலை…’ பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

 

‘பட்டப்பகலில் தோசை கல்லால் அடித்து நர்சிங் சகோதரிகள் கொலை…’ பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள கோதாவரி அருகே தனியார் விடுதியில் மஞ்சு சிதார் மற்றும் மனிஷா சிதார் என்ற இரு சகோதரிகள் தங்கி இருந்துள்ளனர். கடந்த 10 ஆம் தேதி இவர்கள் அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் பதறிப்போய் பார்த்த போது  அறையிலிருந்து இரு இளைஞர்கள் அங்கிருந்து வேகமாகத் தப்பி ஓடியுள்ளனர்.  இதையடுத்து சகோதரிகள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடக்க அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் பாதி வழியிலேயே இறந்துவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் விடுதியிலிருந்து இரு இளைஞர்கள் ஓடுவது பதிவாகி இருந்தது. 

ttn

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் இருவரும் அப்பகுதியைச் சேர்ந்த சயீப் மற்றும் குலாம் முஸ்தபா என்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், சயீப்  – மஞ்சு சிதார் காதலித்து வந்த நிலையில் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இதை அவர்கள் குடும்பத்தினர் எதிர்த்ததால்,  மஞ்சு சிதார் சயீப்பை  பிரிந்துள்ளார். 

ttn

இந்நிலையில் மஞ்சுவின் சகோதரி மனிஷா ராய்ப்பூர் விடுதி ஒன்றில் தங்கி நர்ஸிங் படித்து வந்துள்ளார். மஞ்சுவும் நர்ஸ் என்பதால் தேர்வுக்காக சகோதரிக்கு உதவ விடுதிக்கு வந்துள்ளார். இதனிடையே மஞ்சு வேறு நபருடன் டிக் டோக்  வீடியோ செய்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரத்திலிருந்த சயீப் விடுதிக்கு நண்பருடன் வந்து தகராறு  செய்துள்ளார்.  அப்போது மனிஷா கல்லூரிக்குச் செல்ல விடுதியின்  சாப்பிடும் அறையில் சாப்பிட்டுக் கொண்டிருக்க அக்காவின் சத்தம் அதிகமாகக் கேட்டுள்ளது. அப்போது அறைக்கு ஓடிச்சென்று பார்க்க, சயீப் தனது சகோதரி மஞ்சுவை தோசைக் கல்லால் தலையில் அடித்துள்ளார். இதனால் பதறிப்போன மனிஷா அதைத் தடுக்க முற்பட்ட போது அவரையும் சயீப் அடித்துக்கொலை செய்துள்ளது’ தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.