பட்டப்பகலில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள்.. போலீசார் வலைவீச்சு !

 

பட்டப்பகலில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள்.. போலீசார் வலைவீச்சு !

நேற்று மாலை, பூஜை செய்வதற்காகச் சென்ற பூசாரி கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, பணம், பொருட்கள் திருட்டுப் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தோப்பூர் கிராமத்தில் அங்காளி பரமேஸ்வரி சின்ன கருப்பசாமி  கோவில் உள்ளது. அந்த பகுதியில் இது மிகவும் புகழ்பெற்ற கோவில். அங்கு நேற்று மதியம் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். நேற்று மாலை, பூஜை செய்வதற்காகச் சென்ற பூசாரி கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, பணம், பொருட்கள் திருட்டுப் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

tth

அந்த புகாரின் பேரில் கோவிலில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது, அங்கு வந்த கிராம மக்கள் இது வரை 3 முறை திருட்டு நடந்திருப்பதாகவும் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். 

ttn

மேலும், இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் தோப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருக்கும் என்று தாங்கள் புகார் அளித்ததாகவும், விசாரணை மேற்கொண்டு விரைவில் அந்த மர்ம நபர்களைப் பிடிக்குமாறும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.