படுக்கையுடன் கழிவறை வசதி: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 500 பேருந்துகள்!

 

படுக்கையுடன் கழிவறை வசதி: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 500 பேருந்துகள்!

அரசு போக்குவரத்துக் கழகத்துக்காக  வாங்கப்பட்ட 500 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகத்துக்காக  வாங்கப்பட்ட 500 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 235 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு 118 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.அதே போல் சேலத்துக்கு 60, விழுப்புரத்துக்கு 18, மதுரைக்கு 14, கும்பகோணத்துக்கு 25, கோவைக்கு 16, நெல்லைக்கு 14 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா போக்குவரத்து கழக சார்பாக இந்த  500 புதிய பேருந்துகளைத் துவக்கி வைக்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது.இதை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி சீனிவாசன், தலைமைச் செயலாளர் சண்முகம், போக்குவரத்துத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதிய பேருந்தில் உள்ள வசதிகள்:

  • கழிவறை, படுக்கை வசதிகள்
  • பேருந்து பின்னோக்கி வருவதை அறியவும், பயணிகளின் இறங்கும் இடத்தை அறிவிக்கவும், ஒலி எச்சரிக்கை கருவி 
  • மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் ஊன்றுகோலை வைக்க வசதி
  • மின்னணு வழித்தட பலகைகள் மற்றும் தீயணைப்பு கருவி