‘படுக்கைக்கு வந்தால் தான் வாய்ப்பு என்றார்கள்’…அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன்: பிரபல நடிகை பரபரப்பு புகார்!
நடிகை ஸ்ரீரெட்டி, சின்மயி ஆகியோர் சம்மந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பினர்
படவாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் திரைத்துறையில் இருப்பதாக நடிகைகள் பலர் புகார் கூறினார். குறிப்பாக நடிகை ஸ்ரீரெட்டி, சின்மயி ஆகியோர் சம்மந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பினர். அந்த வரிசையில் இணைந்துள்ளார் நடிகை மஞ்சரி பட்நிஸ்.
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்த ’சக்தி’ என்ற படத்தில் நடிகை மஞ்சரி பட்நிஸ். இவர் தமிழில் முத்திரை, பாலிவுட்டில் பரோட் ஹவுஸ், ஜீனா இசிகா நாம் ஹேய் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இருப்பினும் சக்தி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மஞ்சரி பட்நிஸ் எந்த படத்திலும் நடிக்கவில்லை. படவாய்ப்புகள் குவிந்து மஞ்சரி பட்நிஸ் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் மஞ்சரி பட்நிஸ் மனம் திறந்துள்ளார். அதில், நான் கடைசியாக நடித்த சக்தி திரைப்படம் வெற்றி பெற்றது. எனக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. ஆனாலும் நான் நடிக்கவில்லை. அதற்கு காரணம் படத்தின் வாய்ப்பு கொடுக்க வந்த இயக்குநர்கள் ஒரு கண்டிஷன் போட்டனர். அதாவது தங்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். ஆசைக்கு இணங்கினால் தான் வாய்ப்பு என்றனர். எனக்கு என் திறமை மீது நம்பிக்கை உள்ளது அவர்கள் சொன்னது போல செய்து தான் நான் படத்தில் நடிக்கவேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. அதனால் தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டேன்’ என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். மஞ்சரி பட்நிஸின் இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.