படுக்கைக்கு அழைத்ததால் திரையுலகில் இருந்து விலகினேன்! பிரபல நடிகை பரபரப்பு பேட்டி!

 

படுக்கைக்கு அழைத்ததால் திரையுலகில் இருந்து விலகினேன்! பிரபல நடிகை பரபரப்பு பேட்டி!

பிரபல நடிகை ரிச்சா பத்ரா, தன்னை படுக்கைக்கு அழைத்ததால் தான் நடிப்பதை நிறுத்திவிட்டதாகப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

சென்னை: பிரபல நடிகை ரிச்சா பத்ரா, தன்னை படுக்கைக்கு அழைத்ததால் தான் நடிப்பதை நிறுத்திவிட்டதாகப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

பிரபல இந்தி தொலைக்காட்சியில் ‘கிச்டி’ என்கிற தொடரின்  மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா பத்ரா. அந்த தொடரின் மூலம் சின்ன திரையில் பிரபலமானார். அதையடுத்து ரிச்சா ‘ஃபா பாஹு அர் பேபி’ மற்றும் ‘மிஸஸ் டெண்டுல்கர்’ போன்ற தொடர்களில் நடித்துள்ளார். 

richa

இந்த நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திரைத்துறையை விட்டு விலகி இருந்தார். இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் பேட்டியில் அவர் கூறியதாவது, ‘அனைவரும் போல் எனக்கும் திருமணத்திற்குப் பிறகு நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதற்காக ஆடிஷனுக்கு சென்று இருந்தேன். ஆனால் வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வர வேண்டும் என்று கூறினார்கள். ஒரு காஸ்டிங் டைரக்டரோ, என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால், உனக்கு வேலை தருகிறேன் என்றார்.

richa

காபி ஷாப்பில் சந்திக்க கேட்டால், நீ ஹோட்டல் அறைக்கு வா என வற்புறுத்தினார்கள். அந்த சம்பவத்திற்குப் பிறகு நான் என் பெயரைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை, அதனால் தான் நடித்தவரிக்கும் போதும் என்று, நடிப்பதையே நிறுத்திவிட்டேன்’ என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: இயக்குநர் அவதாரம் எடுக்கும் சூப்பர்ஸ்டார் !!