“படுக்கறதுக்கு அவ ,பொங்கி போட நானா ?’ -கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவி சுட்டுக் கொலை …
நேத்ராபால் சிங் என்ற நபர் 2011 ம் ஆண்டு பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஹ்ராய் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான ராக்கி என்பவரை மணந்தார்.அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன.இதற்கிடையில் நேத்ரபாலு உள்ளூரில் ஒரு சின்ன வீடு செட்டப் செய்தார்
ஆக்ராவில் கக்ரால் போலீஸ் எல்லைக்குட்பட்ட பார்மல் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான நேத்ராபால் சிங் என்ற நபர் 2011 ம் ஆண்டு பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஹ்ராய் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான ராக்கி என்பவரை மணந்தார்.அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன.இதற்கிடையில் நேத்ரபாலு உள்ளூரில் ஒரு சின்ன வீடு செட்டப் செய்தார்.இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்தது .
சென்ற வாரம் இருவரும் ஒரு திருமணத்திற்கு போய் விட்டு வீட்டுக்கு வந்ததும் வழக்கம்போல சின்ன வீடு சண்டை நடந்தது.அப்போது இதனால் கோபமுற்ற அவரின் கணவர் வீட்டிலிருந்த ஒரு துப்பாக்கியால் மனைவியை சுட்டுக் கொன்றார்.அப்போது குழந்தைகள் வேறொரு அறையில் இருந்தனர்.பிறகு நேத்ரபால் போலீசுக்கு போன் செய்து தன் வீட்டிற்கு கொள்ளையர்கள் புகுந்து மனைவியை கொன்று விட்டு 1.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாக கதை கட்டினார்.
போலீசார் வீட்டிற்கு வந்து குழந்தைகளிடம் விசாரித்த போது அவர் கூறியது பொய் எனவும்,இவரே மனைவியை கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் கொன்ற விஷயம் தெரிய வந்தது.பிறகு போலீசார் நேத்ரபாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.