படம் வெளியாவதில் சிக்கல்! செய்யாத தப்புக்காக பழி வாங்குறாங்க…வெங்கட்பிரபு உருக்கம்!?

 

படம் வெளியாவதில் சிக்கல்! செய்யாத தப்புக்காக பழி வாங்குறாங்க…வெங்கட்பிரபு உருக்கம்!?

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆர்.கே.நகர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். 

சென்னை: நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆர்.கே.நகர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். 

பிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பில் வெங்கட்பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர்.சரவண ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ளார். 

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்.12ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான புரொமோஷன் பணிகளில் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்,  தற்போது இப்படம் வரும் ஏப்ரல் 12ல் வெளியாகாது என்று இயக்குநர் வெங்கட் பிரபு வீடியோ பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.

rknagar

அதில் அவர் கூறியதாவது, ‘ரசிகர்களுக்கு வணக்கம். என்னுடைய பிளாக் டிக்கெட் கம்பெணியும், பத்ரி கஸ்தூரியின் சர்தா எண்டர்டெயின்மெண்ட் கம்பெணியும் இணைந்து தயாரித்த ஆர்.கே.நகர் படம் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி வெளியாக தயாராக இருந்தது. எல்லா வேலையும் முடிந்து, வெளியிடுவதற்காகக் காத்திருந்தோம்.

rknagar

ஆனால் எதிர்பாராதவிதமாக, சில பல காரணங்கள் நாங்கள் செய்யாத தப்புக்காகப் படம் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு தான் இப்படத்தை வெளியிட முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் யாருடைய பெயரையும் சொல்ல விரும்பவில்லை. 

ஆர்.கே.நகர் படத்துக்கு எப்போதும் போல உங்களுடைய ஆதரவை நீங்கள் கொடுக்க வேண்டும். இது அரசியல் படம் இல்லை. யாரையும் குறிப்பிட்டு இந்த படம் எடுக்கப்படவில்லை. இறுதியாக,தல பாணியில் சொல்ல வேண்டும் என்றால், வாழு வாழ விடு நன்றி’ என்று கூறியுள்ளார்