படப்பிடிப்பில் விபத்து குறித்து பதிவு வெளியிட்ட அனுஷ்கா!

 

படப்பிடிப்பில் விபத்து குறித்து பதிவு வெளியிட்ட அனுஷ்கா!

படப்பிடிப்பில் சிறிய விபத்து ஏற்பட்டதாக வெளியான செய்தி குறித்து நடிகை அனுஷ்கா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: படப்பிடிப்பில் சிறிய விபத்து ஏற்பட்டதாக வெளியான செய்தி குறித்து நடிகை அனுஷ்கா விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கில் பிரமாண்டமாக உருவாக்கி வரும் திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து அமிதாப்பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகை அனுஷ்கா முக்கிய தோற்றத்தில் நடித்து வருகிறார். 

இதற்கிடையில் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை அனுஷ்காவிற்கு காலில், எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், சில வாரங்களுக்கு அவர் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் ஒரு சில செய்திகள் பரவின.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

??

A post shared by Anushka Shetty (@anushkashettyofficial) on

இந்நிலையில், இது குறித்து அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ‘நான் நலமுடன் இருக்கிறேன். சந்தோஷமாக சீட்டலில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். லவ் யூ ஆல்’ என்று குறிப்பித்துள்ளார்.