படப்பிடிப்பில் யானை மேல் இருந்து தவறி விழுந்த ஆரவ்! 

 

படப்பிடிப்பில் யானை மேல் இருந்து தவறி விழுந்த ஆரவ்! 

ராஜ பீமா படப்பிடிப்பில் எதிர்பாராதவிதமாக நடிகர் ஆரவ் யானை மேல் இருந்து தவறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

சென்னை: ராஜ பீமா படப்பிடிப்பில் எதிர்பாராதவிதமாக நடிகர் ஆரவ் யானை மேல் இருந்து தவறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஆரவ் நடிக்கும் ராஜா பீமா திரைப்படத்தை அறிமுக இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கத்தில் சுரிபி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் ஆரவ் உடன் ஒரு பீட்டர் என்ற யானையும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறது. படத்தின் முக்கியமான காட்சிகளை தாய்லாந்திலும், ஒரு சில காட்சிகள்  பொள்ளாச்சியிலும் படம் பிடித்துள்ளனர். மேலும் கடந்த 7 நாட்களாக கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில்,  ராட்சச மரங்கள் இடையேயும் படமாக்கி வருகின்றனர்.

raja bheema

இந்நிலையில் ஆரவ் மற்றும் பீட்டர் யானை சம்மந்தப்பட்ட காட்சிகளைப் படம் பிடிப்பு பொழுது, எதிர்பாராதவிதமாக யானை மேல் இருந்து கீழே விழுந்தார் ஆரவ். படப்பிடிப்பு குழுவினர் மருத்துவ உதவியை உடனே நாடினர். எனினும் அதை பொருட்படுத்தாது படங்களில் நடித்திருக்கிறார். இதை படக்குழு பெருமையாகக் கூறி வருகின்றனர். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.