படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் இருவர் பலி! வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!?

 

படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் இருவர் பலி! வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!?

நடிகை வீரலக்ஷ்மி நடித்து வரும் கன்னட சினிமா படப்பிடிப்பில் திருடரென்று ஏற்பட்ட விபத்தில்,வேடிக்கை பார்க்க வந்த 8 வயது குழந்தை மற்றும் அவரின் தாய் சம்பவ இடத்திலேயே பரிதவமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னை: நடிகை வீரலக்ஷ்மி நடித்து வரும் கன்னட சினிமா படப்பிடிப்பில் திருடரென்று ஏற்பட்ட விபத்தில்,வேடிக்கை பார்க்க வந்த 8 வயது குழந்தை மற்றும் அவரின் தாய் சம்பவ இடத்திலேயே பரிதவமாக உயிரிழந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. அதையடுத்து பல பல படங்களில் நடித்து பிரபலமான இவர் கதாநாயகி கதாபாத்திரம் மட்டுமின்றி வில்லி கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றுவருகிறார். 

இவர் நடிப்பில் தற்போது வெல்வெட் நகரம், கன்னி ராசி, நீயா 2 என்று அரை டஜன் படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. அதையடுத்து தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன் உறவினர் சிரஞ்சீவி சார்ஜா நாயகனாக நடித்து வரும் ‘ரணம்’ படத்தில் வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு அருகேயுள்ள பாகலூரு என்ற இடத்தில் நடைபெற்று வந்தது. 

varalaxmi

இந்நிலையில் அங்குள்ள ஷெல் கேஸ் என்ற கம்பெனியில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது காரை வெடிக்க வைக்கும் காட்சி எடுக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக தீ உருவாக்க வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்தது சிதறியது.அதில் படப்பிடிப்பைப் வேடிக்கை பார்க்க வந்த சுமைரா என்ற பெண்ணும் அவருடைய 8 வயது பெண் குழந்தையும் சம்பவ இடத்தில் பரிதவமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட பெங்களூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, பலியான இரண்டு பெண்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: பொய்யான முகமூடியை போட்டுக்காதிங்க… வாழ்க்கை தத்துவம் சொல்லும் வரலட்சுமி சரத்குமார்!