படத்தை முடிக்க பணம் இல்லாததால் கொள்ளையடிக்க முயன்ற தயாரிப்பாளர் கைது!

 

படத்தை முடிக்க பணம் இல்லாததால் கொள்ளையடிக்க முயன்ற தயாரிப்பாளர் கைது!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியில் கொள்ளையடிக்க முயன்ற தயாரிப்பாளர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியில் கொள்ளையடிக்க முயன்ற தயாரிப்பாளர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் கண்காணிப்பை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர். அந்தவழியாக வந்த காரை சோதனை செய்தனர். அப்போது கொள்ளையடிக்க திட்டமிட்ட ரவி, கண்ணன்,  தயாரிப்பாளர் பாண்டியன்,  தானேஸ்வரன்,  பிரதீப்சரண் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களுடம், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வசதியான வீட்டை தேர்ந்தெடுத்து கொள்ளையில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. 

பாண்டியன் என்பவர் பஞ்சதாங்கி என்ற படத்தை தயாரித்து வருவதாகவும், தற்போது, படம் முடியும் தருவாயில் பணம் இல்லாததால் கொள்ளையடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.