பஞ்சாயத்து தலைவராக வெற்றிப்பெற்ற 72 வயது முதியவர் உயிரிழப்பு! 

 

பஞ்சாயத்து தலைவராக வெற்றிப்பெற்ற 72 வயது முதியவர் உயிரிழப்பு! 

பெரம்பலூர் மாவட்டத்தில், பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்ற 72 வயது முதியவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டத்தில், பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்ற 72 வயது முதியவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் அருகே உள்ள ஆதனூரில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு  72 வயதான மணிவேல் என்பவர் ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தில் போட்டியிட்டார். வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில் மணிவேலுக்கு 962 வாக்குகள் கிடைத்தது. இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை விட 166 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

மணிவேல்

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இருமல் மற்றும் சளியால் அவதிபட்டு வந்த மணிவேல், இன்று காலை 5 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்றவர் சான்றிதழ் பெற்ற மறுநாளே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.