பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு!

 

பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு!

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வரும் மே 3ம் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கடந்த 20 ஆம் தேதி முதல் சில மாநிலங்கள் குறிப்பிட்ட துறைகள் இயங்கும் வகையில் ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்தின. ஆனால் டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஊரடங்கு தளர்வு கிடையாது என அறிவித்தன.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வரும் மே 3ம் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கடந்த 20 ஆம் தேதி முதல் சில மாநிலங்கள் குறிப்பிட்ட துறைகள் இயங்கும் வகையில் ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்தின. ஆனால் டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஊரடங்கு தளர்வு கிடையாது என அறிவித்தன.

இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கவலை மக்கள் மத்தியில் உள்ள நிலையில், பஞ்சாப் மாநிலம் அதிரடியாக மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்துவதை உறுதி செய்ய டி.சி.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்காலை 7 மணி முதல் 11 மணி வரை கடைகள் திறக்கப்பட்டு மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

பஞ்சாபில் ஊரடங்கு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பஞ்சாபில் 332 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 19ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 71 ஆகவும் உள்ளது.