பச்சைக் குழந்தையை கொடூரமாக தாக்கும் தந்தை ! வீடியோ ஆதாரத்துடன் தேடுகிறது போலீஸ் !

 

பச்சைக் குழந்தையை கொடூரமாக தாக்கும் தந்தை ! வீடியோ ஆதாரத்துடன் தேடுகிறது போலீஸ் !

மகாராஷ்டிர மாநிலத்தில் கைக் குழந்தை ஒன்றை தந்தை தாக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பலரை கொதித்தெழ செய்துள்ளது.

மும்பை வட்டாரத்தில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் டீசன்ட்டனாவர் போல் இருக்கும் ஒருவர் தன் கையில் இருக்கும் குழந்தையை சரமாரியாக அடிக்கிறார்.கொடூரமாக தாக்குகிறார். ஈவு இரக்கமின்றி செய்யும் அந்த நபர் தந்தை என கூறப்படுகிறது.

இந்த வீடியோக்கள் வைரலாக சமூகவலைதளவாசிகள் பலர் எப்படியாவது குழந்தையை காப்பாற்ற வேண்டும் என கோரிகை விடுத்துள்ளனர். வீடியோவை பார்த்த சிலர் அழுதே விட்டனர்.

இந்த வீடியோ சுனபட்டி பகுதியில் இருந்து வெளியானதாகக் கூறப்படும் நிலையில், ஆதாரங்கள் கிடைத்தவுடன் அந்த நபரை கைது செய்து குழந்தை காப்பாற்றப்படும் என காவல்துறை தெரிவித்து உள்ளது.

Man Attack Child

இது குறித்து பேசிய போலீஸ் ஒருவர் ஒரு குழந்தையை இப்படி தாக்குபவர் தந்தையாக இருக்க வாய்ப்பில்லை. ஏன் அந்த குழந்தையை அவ்வாறு அடித்துள்ளார் என்பதும் அவரை கண்டுபிடித்த பிறகே தெரியவரும் என கூறினார்.

சமூக வலைதளங்களில் இதுபோன்ற வெளியாகும் வீடியோக்கள் பெரும்பாலும் மேலைநாடுகளில் இருந்து வரும். குழந்தைகளை பார்த்துகொள்ளும் ஆயாக்கள் அந்த குழந்தைகள் சேஷ்டை செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அடிப்பர். பின்னர் சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் பெற்றோர் புகார் அளித்து அந்த பெண்கள் மீது நடவடிக்கை எடுத்து விடுவார்கள்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பார்கள். இன்னும் சொல்லப்போனால் குழந்தையின் முகம் கண்ணாடி போல என்பார்கள். இது எதுவுமே உணராத கயவர்களை பற்றி நாம் பேசி என்ன பயன்?