பங்கு வர்த்தகத்தில் ரூ.51 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 199 புள்ளிகள் உயர்ந்தது

 

பங்கு வர்த்தகத்தில் ரூ.51 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 199 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 199 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்க பங்குச் சந்தைகளில் நேற்று வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது போன்ற சர்வதேச சந்தை நிலவரங்களால் இன்று காலையில் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. அதானி கேஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே உயர்ந்தது போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

இந்துஸ்தான் யூனிலீவர்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர், சன்பார்மா, டெக்மகிந்திரா, நெஸ்லே இந்தியா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி, என்.டி.பி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, இண்டஸ்இந்த் வங்கி மற்றும் ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஆக்சிஸ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,030 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,295 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 185 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை  மதிப்பு ரூ.122.77 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக,  இன்று முதலீட்டாளர்களுக்கு பங்கு வர்த்தகத்தின் வாயிலாக ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.51 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

தேசிய பங்குச் சந்தை

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 199.32 புள்ளிகள் உயர்ந்து 31,642.70 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 52.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,251.50 புள்ளிகளில் முடிவுற்றது.