பங்குச் சந்தையில் ரூ.54 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்ந்தது…

 

பங்குச் சந்தையில் ரூ.54 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. கொரோனா வைரசுக்கான தடுப்பூசி சோதனைகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக வெளியான தகவல்கள் பங்குச் சந்தைகளில் ஏற்றத்துக்கு வழிவகுத்தது. இருப்பினும் பங்கு வர்த்தகம் சிறிது சறுக்கலை சந்தித்தது. இறுதியில் ஏற்றத்துடன் பங்கு வர்த்தகம் முடிவடைந்தது.

கொரோனா வைரஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி., அல்ட்ராடெக்சிமெண்ட், ஐ.டி.சி. மற்றும் பவர்கிரிட் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. இன்டஸ்இண்ட் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல் அண்டு டி, ஸ்டேட் வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்கு வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,029 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,261 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 169 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.119.56 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் பங்குச் சந்தையால் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார்  ரூ.54 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 167.19 புள்ளிகள் அதிகரித்து 30,196.17 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 55.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 8,879.10 புள்ளிகளில் நிலைகொண்டது.