பங்குச் சந்தையில் ரூ.16 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 59 புள்ளிகள் உயர்ந்தது….

 

பங்குச் சந்தையில் ரூ.16 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 59 புள்ளிகள் உயர்ந்தது….

இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுமாராக இருந்தது. சென்செக்ஸ் 59 புள்ளிகள் உயர்ந்தது.

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் வர்த்தகம் ஒரு நிலை இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருந்தது. இறுதியில் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடனும், தேசிய பங்குச் சந்தையில் சிறிய சரிவுடனும் பங்கு வர்த்தகம் முடிந்தது. 

சன் பார்மா

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா, இன்போசிஸ், எச்.டி.எப்.சி. வங்கி, என்.டி.பி.சி. மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி, ஐ.டி.சி., இண்டஸ்இந்த் வங்கி, மாருதி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஆக்சிஸ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,482 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,012 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 192 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.123.70 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.16 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 59.28 புள்ளிகள் உயர்ந்து 31,648.00 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 4.90 புள்ளிகள் குறைந்து 9,261.85 புள்ளிகளில்  நிலைகொண்டது.