பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன; ஜெட் ஏர்வேஸின் பங்குகள் 28% உயர்வு

 

பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன; ஜெட் ஏர்வேஸின் பங்குகள் 28% உயர்வு

பங்குச் சந்தைகள் இன்றைய வர்த்தக நேர முடிவில் உயர்வுடன் முடிவடைந்தன.

மும்பை: பங்குச் சந்தைகள் இன்றைய வர்த்தக நேர முடிவில் உயர்வுடன் முடிவடைந்தன.
 
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 118.55 புள்ளிகள் உயர்ந்து 35260.54 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 40.40 புள்ளிகள் உயர்ந்து 10,616.70 புள்ளிகளில் முடிவடைந்தது.

டாடா – ஜெட் ஏர்வேஸின் கூட்டு வர்த்தக முயற்சிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க இணக்கமாக இருப்பதாக செய்தி வெளியானதால், ஜெட் ஏர்வேஸின் பங்குகள் 28% உயர்ந்து வர்த்தகர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டித்தந்தன.

அதானி போர்ட் (4.28%), கோடாக் மஹிந்த்ரா (2.86%), ஹீரோ ஹோண்டா (2.62%) ஆகிய பங்குகள் உயர்ந்து பங்கு வர்த்தக பட்டியலில் முதலிடங்களை பிடித்தன.