பக்ரீத்: மகிழ்ச்சியில் விக்ராந்த்?

 

பக்ரீத்: மகிழ்ச்சியில் விக்ராந்த்?

விக்ராந்த் பெரும் எதிர்பார்ப்புடன் நடித்திருக்கும் பக்ரீத் திரைப்படம் வெகு விரைவில் வெளியாக உள்ளது.

சென்னை: விக்ராந்த் பெரும் எதிர்பார்ப்புடன் நடித்திருக்கும் பக்ரீத் திரைப்படம் வெகு விரைவில் வெளியாக உள்ளது.

நடிகர் விஜய்யின் சித்தி மகனான விக்ராந்த் சினிமாவில் நடிக்க வந்து பல வருடங்களாகிறது. சினிமாவில் இதுவரைக்கும் அவருக்கென்று ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. 

இதனால் தனது கேரியரையும்  மாற்றிக்கொண்டு ஹீரோவாகதான் நடிப்பேன் என்று நினைக்காமல்  கௌரவ வேடங்களிலும்,  முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். பாண்டிநாடு படத்தில் விக்ராந்தின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது.  இதன் பிறகும் விக்ராந்திற்கு நாயகனாக நடிக்க சரியான வாய்ப்பு வரவில்லை. 
இந்நிலையில் இயக்குனர் ஜெகதீஷன் சுப்பு ஒரு கதையை விகராந்திற்கு சொல்லியிருக்கிறார். கதையில் தனது திறமையை நிரூபிக்க  ஸ்கோப் இருப்பதாக தெரிந்து கொண்ட விக்ராந்த் அந்தக் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார். ‘பக்ரீத்’ என்று பெயர் வைக்கப்பட்ட அந்த படம் இப்போது வெளியாக தயார் நிலையில் இருக்கிறது. 

 இந்தப் படத்தை கோடம்பாக்கத்தில் இருக்கும் திரையுலக இயக்குனர்கள் பலருக்கும் திரையிட்டு காட்டியிருக்கிறார்கள். படம் பார்த்த அனைவரும் விக்ராந்தை பாரட்டியிருக்கிறார்கள்.  படத்தில் அவருடன் ஒரு ஒட்டகமும் நடித்திருக்கிறது.  நெகிழ வைக்கும் காட்சிகளுடன் இருக்கும் கதை எல்லொருக்கும் பிடிக்கும் என்று கூறுகிறார்கள்.