பக்கா பிளான் போட்டு தங்கையின் காதலனை கொன்று எரித்த கும்பல்; காதலியின் அண்ணன் உள்பட 7 பேர் கைது!

 

பக்கா பிளான் போட்டு தங்கையின் காதலனை கொன்று எரித்த கும்பல்;  காதலியின் அண்ணன் உள்பட 7 பேர் கைது!

இதுகுறித்து தகவலறிந்த ராகவன் ஐதராபாத்திலிருந்து நேற்று முன்தினம்  காலை ஊருக்கு வந்துள்ளார்.

புதுவையை அடுத்த தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் ராகவன். இவர் நேற்று  கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் நண்பர்கள்  சிவனேசன், சஞ்சய் ஆகியோருடன் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல்  சிவசேனன், சஞ்சயை தாக்கிவிட்டு ராகவனை கடத்தி சென்றனர். பின்னர்  ராகவனை கோட்டக்குப்பம் அய்யனார்கோவில் பின்புறம் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில்  வைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். 

 

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பாதி எரிந்தும் எரியாமலும்  இருந்த உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராகவன் கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய  தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராகவனும் அதே பகுதியை சேர்ந்த அருணா என்ற பெண்ணும்  காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே ராகவன் பணி நிமித்தமாக ஐதராபாத்துக்கு சென்றுள்ளார். இதையடுத்து இவர்களின் காதல் அந்த பெண்ணின் வீட்டுக்கு தெரியவர அவர்கள் பெண்ணை கண்டித்துள்ளனர். மேலும் வேறு இடத்தில மாப்பிள்ளை  பார்த்து திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் அவர் கடந்த 21 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ராகவன் ஐதராபாத்திலிருந்து நேற்று முன்தினம்  காலை ஊருக்கு வந்துள்ளார். அப்போது தான் அவரை மர்மநபர்கள் அரிவாளால்  வெட்டி கொலைசெய்துள்ளனர். 

ttn

இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில், அருணாவின் அண்ணன் அருண்குமார் , பிரவீன்குமார், ரஞ்சித்குமார், பிரகாஷ், சந்தோஷ், பாலாஜி மற்றும் ராகவனின் நண்பர் சஞ்சய் ஆகிய 7 பேரை  போலீசார்  கைது செய்தனர். தங்கை அருணா தற்கொலை செய்து கொண்டதற்கு ராகவன் தான் காரணம்  என்று நினைத்த அந்த கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஐதராபாத்தில் ராகவனுடன் வேலைசெய்து வந்த சஞ்சயை மிரட்டி அவரை ஊருக்கு அழைத்து வந்து திட்டமிட்டு கொலை செய்துள்ளது அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.