பக்கத்து வீட்டு பெண்ணுக்கு பிளையிங் கிஸ்……மொகாலி வாலிபருக்கு 3 ஆண்டு சிறை…

 

பக்கத்து வீட்டு பெண்ணுக்கு பிளையிங் கிஸ்……மொகாலி வாலிபருக்கு 3 ஆண்டு சிறை…

மொகாலியில், பக்கத்து வீட்டு பெண்ணுக்கு பிளையிங் கிஸ் கொடுத்த இளைஞருக்கு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தது.

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் பேஸ் 11 பகுதியில் வீட்டுவசதி சொசைட்டியில் பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். அதே சொசைட்டியில் அந்த பெண் இருக்கும் வீட்டுக்கு மேல்தளத்தில் உள்ள வீட்டில் வினோத் என்ற வாலிபர் வசித்து வருகிறார். அந்த பெண் வீட்டின் வெளியே நிற்கும் போது மாடியில் இருக்கும் வினோத் அநாகரீகமான கருத்துக்கள் சொல்வது, பிளையிங் கிஸ் கொடுப்பது போன்ற சைகைகள் செய்து தொந்தரவு கொடுத்து வந்தார்.

பிளையிங் கிஸ்

ஒரு கட்டத்தில் வினோத்தின் தொந்தரவை பொறுக்க முடியாமல் இது குறித்து தனது கணவரிடம் அந்த பெண் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் தனது கணவருடன் அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்றனர். வினோத் கொடுக்கும் தொந்தரவு குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து வினோத்துக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தற்கு பதிலடியாக அந்த பெண்ணும் மற்றும் அவரது கணவரும் தன்னை தாக்கியதாக வினோத் புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த புகாரை விசாரணை செய்ததில் வினோத் தாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதையும், அது பொய் புகார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

நீதிமன்றம் உத்தரவு

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குற்றவாளி வினோத் தொந்தரவு கொடுத்தது நீதிமன்றத்தில் உறுதியானது. இதனையடுத்து நீதிமன்றம் வினோத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தது.