‘பக்கத்து வீட்டு நாயுடன் உறவு’ : வளர்ப்பு நாய்க்கு உரிமையாளர் கொடுத்த விநோத தண்டனை!

 

‘பக்கத்து வீட்டு  நாயுடன் உறவு’ : வளர்ப்பு நாய்க்கு உரிமையாளர் கொடுத்த விநோத தண்டனை!

வேறொரு இனத்தைச் சேர்ந்த நாயுடன் உறவு வைத்துக் கொண்டதால் துரத்தி விட்டுவிட்டோம்

கேரளா: பக்கத்து வீட்டு நாயுடன் உறவு வைத்துக்கொண்டதற்காக பொமேரியன் நாயை அதன் உரிமையாளர் துரத்தி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த சாகாய் பகுதியில் பொமேரியன் நாய் ஒன்று ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்து வந்தது. இதைக்கண்ட  விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன் அந்த நாயை மீட்டார். அப்போது அந்த நாயின் கழுத்தில் கடிதம் ஒன்று இருந்தது. 

dog

அந்த கடிதத்தில், இந்த நாய் நல்லபழக்கங்களைக் கொண்டது. இது பால், முட்டை, பிஸ்கெட் ஆகியவற்றை உண்ணும். தேவையற்ற செயல்களில் ஈடுபடாது. அதே போல் யாரையும் கடிக்காது. இருப்பினும் இந்த நாய் பக்கத்து வீட்டில் உள்ள வேறொரு இனத்தைச் சேர்ந்த நாயுடன் உறவு வைத்துக் கொண்டதால் துரத்தி விட்டுவிட்டோம்’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்த கடிதம்  விலங்குகள் நல ஆர்வலர் ஷமீனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

 

இதுகுறித்து பேசிய விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன்,  பக்கத்து வீட்டு நாயுடன் உறவு வைத்துக் கொள்வது என்ன குற்றமா? அந்த நாய்க்கு என்ன தெரியும். தற்போது அந்த நாய் வேறொருவர் வீட்டில் வளர்க்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தன்னுடைய முன்னாள் உரிமையாளர் வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்று வாசலையே பார்த்து கொண்டிருக்கிறது’ என்று கூறியுள்ளார்.