நோ மீன்ஸ் நோ…தெலுங்கானா என்கவுண்டருக்கு போஸ்டர் அடித்து ஆதரவு தெரிவித்த அஜித் ரசிகர்கள்!

 

நோ மீன்ஸ் நோ…தெலுங்கானா என்கவுண்டருக்கு போஸ்டர் அடித்து ஆதரவு தெரிவித்த அஜித் ரசிகர்கள்!

நேற்று முன்தினம்   அதிகாலை 3 மணியளவில்  அவர்கள் தப்பியோட முயன்றதால்  சுட்டுக்கொன்றதாக  சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையிலிருந்த  சென்னகேசவலு, நவீன் உள்ளிட்ட நால்வர் திட்டமிட்டுக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன்  பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.  இந்த  கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா  ஆகிய நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம்   அதிகாலை 3 மணியளவில்  அவர்கள் தப்பியோட முயன்றதால்  சுட்டுக்கொன்றதாக  சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.

ttn

இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தாமல்  காவல்துறை என்கவுண்டரில்  சுட்டு கொன்றது வன்முறை என்று ஒருதரப்பினர் வாதிட்டு வருகின்றனர். 

ttn

இந்நிலையில் மதுரை அஜித் ரசிகர்கள் தெலங்கானா போலீசாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் அஜித் போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தைப் போட்டதுடன் தெலுங்கானா காவல்துறையினருக்கு வாழ்த்துகள் என அச்சடித்த போஸ்டர்களை மதுரை முழுவதும்  ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.