நோயாளிகளை தனிமைப்படுத்த தனி வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 

நோயாளிகளை தனிமைப்படுத்த  தனி வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அனைத்து ரயில்பெட்டிகளும் மேற்கண்டவாறு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் தனிமைப்படுத்தப் படுபவர்களின்  எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், அதிகமாக படுக்கை வசதிகளை உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.  அதன் படி, ஏசி அல்லாத ரயில்களை தனிமைப்படுத்தப்பட்டவர்களின் படுக்கை வசதிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மொத்தம் 9 கேபின்கள் கொண்ட பெட்டிகளில் ஒரு கேபினுக்கு ஒரு நோயாளி எனவும்  எண்ணிக்கை அதிகரித்தால் ஒரு கேபினுக்கு இரண்டு நோயாளிகள் என தனிமைப்படுத்த திட்டமிடபட்டுள்ளது. 

ttn

இதற்காக கேபின்கள் மேலே ஏறுவதற்கு இருக்கும் ஏணியை நீக்கவும், கழிவறையை  குளியலறையாக மாற்றவும், கைகழுவ உரிய வசதியும் ஏற்படுத்த பெட்டிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் நோயாளிகள் தனிமையில் இருக்கும் நிலையில் அவர்களின் வசதிக்காக சார்ஜ் செய்ய 230 வோல்ட் பிளக் பாயின்டும், மருத்துவ சாதனம் வைக்க வசதியும், இரண்டு படுக்கையை தனிமைபடுத்த திரைசீலையும் அமைக்கப்பட உள்ளதாம்.

ttn

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்காக புதிய ஏற்பாடுகளை செய்ய பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் பேரில், அனைத்து ரயில்பெட்டிகளும் மேற்கண்டவாறு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.