நோயால் அவதிபடும் ராஜா ராணி சஞ்சீவ்?  பிரச்சனைக்கான தீர்வு தேடும் குடும்பம்!?

 

நோயால் அவதிபடும் ராஜா ராணி சஞ்சீவ்?  பிரச்சனைக்கான தீர்வு தேடும் குடும்பம்!?

`ராஜா ராணி’ சீரியல் சஞ்சீவ் தனக்கு ஏற்பட்டுள்ள `அல்டோஃபோபியா’ பிரச்னை குறித்து மனம் திறந்துள்ளார்.

சென்னை: `ராஜா ராணி’ சீரியல் சஞ்சீவ் தனக்கு ஏற்பட்டுள்ள `அல்டோஃபோபியா’ பிரச்னை குறித்து மனம் திறந்துள்ளார்.

விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் `ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமடைந்தவர்கள் ஆல்யா மனசா – சஞ்சீவ். முதலில் நண்பர்களாக பழகி வந்த இவர்கள் பின்பு காதலிப்பதாக அறிவித்தனர். அதையொட்டி இவர்களுக்கு விஜய் டிவியில் நிச்சயதார்த்தத்தை கூட நடத்தி வைத்தனர். 

அதையொட்டி இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக  அறிவித்தனர். இந்த நிலையில் நடிகர் சஞ்சீவ் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து முதல் முறையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘எனக்கு சிறு வயது முதலே `அல்டோஃபோபியா’ பிரச்னை இருந்து வருகிறது. அப்ப்டியென்றால்  உயரத்தைக் கண்டு பயப்படுவது.

alkya

 படியேறி மொட்டை மாடிக்குப் போறதுக்கே ரொம்ப பயப்படுவேன். ஃப்ரெண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க. வளர்ந்த பிறகு இந்தப் பிரச்னை சரியாகிடும்னு நம்பினேன். ஆனா அதிகம் தான் ஆச்சு.  இதனால லிஃப்ட், எஸ்கலேட்டர்ல போகப் பயப்படுவேன். சம்மர்ல ஊட்டி, கொடைக்கானல் மாதிரியான மலைப்பிரதேசங்களுக்கு டூர் போறதுன்னாலும் பயம். 

alya

சினிமாவுக்கு முயற்சி செய்தப்ப, இது ஒரு பெரிய பிரச்னையா வந்து நின்னுச்சு. யார்கிட்டப் போய் இதுக்கு ட்ரீட்மென்ட் எடுக்கணும்’கிற மாதிரி பல கேள்விகள் வந்து போனதே தவிர, நான் எந்த முயற்சியும் பண்ணாததால தீர்வு கிடைத்தபாடு இல்லை.

இந்த நோய் பற்றி இயக்குநர் கிட்ட சொல்லவும் தயக்கம், மறைக்கவும் பயம். சினிமாவுல இருந்தப்ப கூட இந்தச் சிக்கலை கடந்து வந்துட்டேன். ஆனா சீரியலுக்கு வந்த பிறகு வசமா மாட்டி கிட்டேன்’. எப்படியும் கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வருஷம் ஆகும். அதுக்கு முன்னாடியே இந்தப் பிரச்னை சரியாகிடும்னு நம்பிக்கை இருக்கு’ என்று கூறியுள்ளார்.