நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை தரும் கொத்தமல்லியின் நற்குணங்கள்

 

நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை தரும் கொத்தமல்லியின் நற்குணங்கள்

எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. வாசனைக்காகத்தான் சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம். இதன் மருத்துவ குணம் அறிந்தே நம் முன்னோர்கள் சமையலில் தவறாது மல்லியை சேர்த்து வந்திருக்கிறார்கள். 

கொத்தமல்லியின் இலை, தண்டு , வேர் அனைத்தும் மருத்துவ பயன் கொண்டவை . இதனுடைய விதை, காரம், கசப்பு, துவப்பு, இனிப்புன்னு நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவை.

கொத்தமல்லியின் பயன்கள்:

* செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணம் ஆகச் செய்யும்.
    
* புளித்த ஏப்பம்,நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.

* கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும். கண் சூடு குறையச் செய்யும். மாலைக் கண் நோய் உள்ளவர்கள் கொத்தமல்லி கீரையை அவசியம் சேர்த்து வந்தால் குறை நீங்கும்.

* கொத்தமல்லி கீரையில் ஏ,பி.சி உயிர் சத்துக்களும்,சுண்ணாம்புச் சத்தும்,இரும்புச் சத்துக்களும் உள்ளன.

* உடலில் உள்ள கொழுப்புச் சத்துக்களைக் குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதைத் தடுக்கிறது.இதனால் மாரடைப்பு வருவதை குறைக்கலாம்.

* ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது.இன்சுலின் சுரப்பை தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை கொண்டது.  

* கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து கொத்தமல்லியைச்  சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும்.குழந்தையின் எலும்புப் பற்கள் உறுதி அடையும்.
 
* சுவாசம் சம்மந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் போன்றவற்றை நீக்கும் குணம் மல்லிக்கு உண்டு.

தினமும் நாம் உண்ணும் உணவில் ஏதோ ஒரு விதத்தில் கொத்தமல்லியை சேர்த்து வந்தால் நோயற்ற ஆரோகியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழலாம்.