நொடியில் வெடித்த ஏசி! கோயிலுக்குச் சென்ற பின் பலியான இளைஞர்!

 

நொடியில் வெடித்த ஏசி! கோயிலுக்குச் சென்ற பின் பலியான இளைஞர்!

புதுச்சேரி உழந்தை கீரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (32). கார் ஓட்டுநரான இவர் புதுச்சேரியில் சொந்தமாக ட்ராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.  இந்நிலையில், இன்று காலை காரை ஓட்டிக் கொண்டு அருகில் இருந்த ஆலயத்திற்கு சென்றிருக்கிறார் முத்துக்குமரன்.

புதுச்சேரி உழந்தை கீரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (32). கார் ஓட்டுநரான இவர் புதுச்சேரியில் சொந்தமாக ட்ராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.  இந்நிலையில், இன்று காலை காரை ஓட்டிக் கொண்டு அருகில் இருந்த ஆலயத்திற்கு சென்றிருக்கிறார் முத்துக்குமரன். அப்போது காரில் இயங்கி வந்த ஏசியை ஆன் செய்த நிலையிலேயே விட்டு விட்டு கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்திருக்கிறார். திரும்பவும் காருக்குள் நுழைந்ததும் காரில் இருந்த ஏசியில் இருந்து புகை வந்துள்ளது.

muthukumaran

கார் கண்ணாடியை உடனடியாக திறக்க முடியாமல் முத்துக்குமரன் தவித்த நிலையில், நொடியில் கார் ஏசி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்த முத்துக்குமரன் உடல் முழுவதும் தீப்பற்றியது. திடீர் சப்தத்தைக் கேட்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக காரின் கண்ணாடியை உடைத்து காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் தீ வேகமாகப் பரவியதில் முத்துக்குமரன் உடல் கருகி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்பேட்டை போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் கார் ஏசியில் கேஸ் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த முத்துக்குமரனுக்கு அடுத்த சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்தது அந்த பகுதியினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.