‘நேர்கொண்ட பார்வை படம் எனக்கு ரொம்ப பிடித்தது’: நடிகை திரிஷா ஓபன் டாக்!

 

‘நேர்கொண்ட பார்வை படம் எனக்கு ரொம்ப பிடித்தது’: நடிகை திரிஷா ஓபன் டாக்!

நேர்கொண்ட பார்வை திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்ததாக நடிகை திரிஷா கூறியுள்ளார். 

சென்னை: நேர்கொண்ட பார்வை திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்ததாக நடிகை திரிஷா கூறியுள்ளார். 

நடிகை திரிஷா இன்று யுனிசெப் குழந்தைகளுக்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அதில் பேசிய திரிஷா, ‘குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்கையில், அதனை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் தேவைப்படுகிறது. உண்மையான வாழ்வு வேறு படம் வேறு. அதனால் படங்களை சீரியஸாக எடுத்துக் கொன்று, அதனை பின்பற்றக்கூடாது. அது வெறும் கற்பனை மட்டுமே. 

எனக்கு நடிகர் அஜித் என்றால் ரெம்ப பிடிக்கும். அவர் தான் சூப்பர் ஸ்டார். நேர்கொண்ட பார்வை திரைப்படம் எனக்கு ரொம்ப பிடித்தது. இதுபோன்று இன்னும் நிறைய படங்களில் அவர் நடிக்க வேண்டும்.கிராமப்புற பெண்களிடையே சுகாதார விழிப்புணர்வு தற்போது அதிகமாகி வருகிறது’ என்று கூறியுள்ளார். 

அதைத்தொடர்ந்து திர்ஷாவுடன், கல்லூரியில் படிக்கும் மாணவிகள் தங்களது சமூக தொண்டுகள் குறித்துப் பகிர்ந்து கொண்டனர்.