நேர்கொண்ட பார்வை அப்டேட்: தல ரசிகர்கள் உற்சாகம்!

 

நேர்கொண்ட பார்வை அப்டேட்: தல ரசிகர்கள் உற்சாகம்!

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஷூட்டிங் முடிந்து  படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஷூட்டிங் முடிந்து  படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தல அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில்,போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ஆண்ட்ரியா, அபிராமி வெங்கடாச்சலம்,  தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதமாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங் பணிகள், தற்போது முழுவதுமாக நிறைவடைந்துவிட்டதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய படக்குழுவினர் விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கு 1வருட சிறை தண்டனை!?