‘நேர்கொண்டபார்வைக்காக காத்திருக்கிறேன்’: பிரபல திரையரங்கு உரிமையாளர் ட்வீட்! 

 

‘நேர்கொண்டபார்வைக்காக காத்திருக்கிறேன்’: பிரபல திரையரங்கு உரிமையாளர் ட்வீட்! 

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்காகக் காத்திருக்கிறேன் என்று பிரபல திரையரங்கு உரிமையாளர் பதிவு வெளியிட்டுள்ளார். 

சென்னை: அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்காகக் காத்திருக்கிறேன் என்று பிரபல திரையரங்கு உரிமையாளர் பதிவு வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் மதத்திற்கு ஏகப்பட்ட படங்கள் வெளியாகிறது. அது அனைத்துமே வெற்றி அடைகிறது என்று சொல்லமுடியாது. அதிலும் கடந்த மாதம் எந்த பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகாததால் போஸ் ஆபிஸ் வசூல் சற்று பின்தங்கிய இருந்தது. 

இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான ரோகினி சில்வர் ஸ்கிரீன் மேலாளர் நிகிலேஷ், பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஒவ்வொரு வாரமும் நிறைய திரைப்படங்கள் வெளியாகின்றன.அதில் எல்லா படங்களும் திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. சில படங்கள் மட்டுமே மக்கள் கருத்தினால் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

தற்போது ஜூன் மாதம் முடிந்துவிட்டது. இது தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சிறப்பான மாதமாக அமையவில்லை. எந்த பெரிய படங்களும் வெளியாகவில்லை. நேர்கொண்ட பார்வைக்காகக் காத்திருக்கிறேன் கேமை தொடங்குவதற்காக’ என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக சதயம் திரையரங்கத்தில் நேர்கொண்ட பார்வை முன்பதிவு தொடங்கி ஒரு சில நிமிடங்களில் அனைத்தும் டிக்கெட்களும் முடிந்துபோனது. அதனால் இந்த படத்தின் வசூல் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கும் என்றே எதிர்ப்பாக்கப்படுகிறது.