நேருவின் கால் தூசிக்கு கூட அவரு சமம் கிடையாது…… கொந்தளித்த திக்விஜய சிங்….. பதிலடி கொடுத்த பா.ஜ. தலைவர்….

 

நேருவின் கால் தூசிக்கு கூட அவரு சமம் கிடையாது…… கொந்தளித்த திக்விஜய சிங்….. பதிலடி கொடுத்த பா.ஜ. தலைவர்….

தன்னை நேருவின் கால் தூசிக்கு கூட சமம் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் கூறியதற்கு சிவராஜ் சிங் சவுகான் நான் ஒன்றும் ஒரு குடும்பத்தின் அடிமை இல்லை என பதிலடி கொடுத்தார்.

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் நேரு ஒரு கிரிமனல்.  காஷ்மீருக்குள் நுழைந்த பாகிஸ்தான் படைகளை இந்திய ராணுவம் விரட்டி கொண்டு இருந்த போது போர் நிறுத்தத்தை அறிவித்து முதல் குற்றத்தை செய்தார். அடுத்து ஜம்மு அண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்து இரண்டாவது குற்றத்தை செய்து விட்டார் என அதிரடியாக பேசி இருந்தார்.

சிவ்ராஜ் சிங் சவுகான்

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் ஒருபடி மேலே போய் சிவ்ராஜ் சிங் சவுகானை கடுமையாக சாடினார். நேருவின் கால் தூசிக்கு கூட சிவ்ராஜ் சிங் சவுகான் சமம் ஆகமாட்டார். அவர் வெட்கப்பட வேண்டும் என திக்விஜய சிங் கூறியிருந்தார். 

திக்விஜய சிங்

திக்விஜய சிங்குக்கு தற்போது சிவ்ராஜ் சிங் சவுகான் பதிலடி கொடுத்தார். நான் ஒன்றும் ஒரு குடும்பத்தின் அடிமை இல்லை. நான் பாரத தாயின் கால் தூசி. அவளுக்கு சேவை செய்வதிலேயே எனது வாழ்க்கையை செலவழிப்பேன் என்று சிவ்ராஜ் சிங் சவுகான் கூறினார்.