நேருக்கு நேர் மோதிக் கொண்ட அரசு பேருந்துகள்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ !

 

நேருக்கு நேர் மோதிக் கொண்ட அரசு பேருந்துகள்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ !

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த  ஆன்ட்ரியூ சிங் என்பவர் காரமடை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த  ஆன்ட்ரியூ சிங் என்பவர் காரமடை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அரசு பேருந்தும், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் பேருந்தும் எதிரெதிரே சென்றுள்ளது. 

ttn

அந்த இரண்டு பேருந்துகளும் குட்டையூா் அருகே சென்ற போது, ஒரு பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் மற்றொரு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில், காரமடை நோக்கிச்  சென்ற ஆன்ட்ரியூ சிங் இரண்டு பேருந்துகளுக்கும் இடையில் சிக்கிக் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

ttn

இதனைக் கண்ட பொதுமக்கள்  ஆன்ட்ரியூ சிங்கை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கியதால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

 

மேலும், பேருந்தில் பயணம் செய்த 48 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காரமடை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.