நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஆட்டோ, கார்.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த டிரைவர் !

 

நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஆட்டோ, கார்.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த டிரைவர் !

குளச்சல் அருகே சென்று கொண்டிருந்த அவரின் ஆட்டோ குடிநீருக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சகாய ரமேஷ் நாயகம். இவர் வழக்கமாக இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்டுவாராம். அதே போல, நேற்று இரவு சவாரியை முடித்துவிட்டு அதிகாலை வீட்டிற்குச் சென்று கொண்டிருந்துள்ளார். குளச்சல் அருகே சென்று கொண்டிருந்த அவரின் ஆட்டோ குடிநீருக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கியுள்ளது. 

ttn

ஆட்டோவை பள்ளத்தில் இருந்து வெளியே எடுக்க ரமேஷ் முயற்சி செய்த போது ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பள்ளத்தில் இருந்து மேலே ஏறி அதன் அருகில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் மீது மோதியுள்ளது. அப்போதே ஆட்டோவில் இருந்த ரமேஷுக்கு பலத்த அடி பட்டுள்ளது. மீண்டும் சற்று நகர்ந்த ஆட்டோ அந்த தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது வேகமாக நேருக்கு நேர் மோதியுள்ளது. 

ttn

ஆட்டோ கண்ணாடி உடைந்து ரமேஷ் மீது பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, எதிரே இருந்த கார் கண்ணாடியும் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்தில், ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் ரமேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.