நெல்லை சரவணா செல்வரத்தினம் கடையை அடித்து நொறுக்கியவரின் நிலை என்ன தெரியுமா?

 

நெல்லை சரவணா செல்வரத்தினம் கடையை அடித்து நொறுக்கியவரின் நிலை என்ன தெரியுமா?

நெல்லை சரவணா செல்வரத்தினம் ஸ்டோரில் நேற்று அரிவாளுடன் கடைக்குள் நுழைந்த இருவர், அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி, கண்ணாடி கதவுகளை சேதப்படுத்துகின்றனர். 

சென்னையில் உள்ள சரவணா செல்வரத்தினத்தின் கிளை திருநெல்வேலியிலும் உள்ளது. நேற்று அந்த கடைக்குள் நுழைந்த முருகானந்தம் மற்றும் அவரது கூட்டாளிகள் கடையின் கண்ணாடியை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. எதற்காக கடையை அடிக்கிறார்கள் என விசாரணை செய்ததில்,  சில நாட்களுக்கு முன்பு பிளாஸ்டிக் பாட்டில்களை திருடி பிடிபட்ட முருகானந்தம் என்பவரை செல்போனில் படம் பிடித்து அதனை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

அந்த முருகானந்தம் தான் தற்போது பட்டாக்கத்தியுடன் அட்டகாசம் செய்ததாக கூறப்படுகிறது. கடையை அடித்து நொறுக்கிவிட்டு சென்ற முருகானந்தம் காவல்துறையினர் தேடி வருவதை அறிந்து ஓட்டம் பிடித்தார். போலீசுக்கு பயந்து ஓடும்போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடைந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.