நெல்லை கண்ணனை கைது செய்யாவிட்டால் மெரினாவில் நாளை தர்ணா போராட்டம்- ஹெச். ராஜா அதிரடி!

 

நெல்லை கண்ணனை கைது செய்யாவிட்டால் மெரினாவில் நாளை தர்ணா போராட்டம்- ஹெச். ராஜா அதிரடி!

 

அமித்ஷா, மோடி பற்றி பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நெல்லைக் கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க தரப்பில் நெருக்கடி தரப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில் நெல்லையில் நடந்த மாநாட்டில் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய நெல்லை கண்ணன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியின் சோலியை முடிக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.  அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து, பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு  செய்துள்ளனர். 

இந்நிலையில், ஏற்கனவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நெல்லை கண்ணன் இன்று நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் நெல்லை கண்ணனை கைது செய்யாவிட்டால் மெரினாவில் நாளை தர்ணா போராட்டம் நடத்தப்படும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

 

 

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர்  ஹெச். ராஜா, “நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி 1.1.2020 மாலை 3.00 மணிக்கு மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே திரு.LG, பொன்னார், CPR மற்றும் நான் Sit in Dharna மேற்கொள்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 2019ல் நடந்த குற்றத்திற்கு 2019 திலேயே நடவடிக்கை தேவை. இல்லையெனில் 2020 போராட்ட ஆண்டாகத் துவங்கும்” என பதிவிட்டுள்ளார்.