நெல்லையில் வெடிகுண்டு சோதனை; போலீசார் குவிப்பு…பதற்றம்!

 

நெல்லையில் வெடிகுண்டு சோதனை; போலீசார் குவிப்பு…பதற்றம்!

வாக்குவாதம் முற்றி இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்

நெல்லை: இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, நெல்லையில் உள்ள வீடுகளில் போலீசார் வெடிகுண்டு சோதனை மேற்கொண்ட சம்பவத்தால் பதற்றம் நிலவுகிறது.

நெல்லை டவுன் பாறையடி பகுதியை சேர்ந்த சங்கர் (22), சதீஷ்குமார் (19), கவுதம் (19) ஆகிய மூன்று பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோட்டையடி பகுதியில் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த கோட்டையடி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், இந்த நேரத்தில் இங்கு ஏன் நிற்கிறீர்கள் என அவர்களை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

murder

இதனால், ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் அரிவாளால் சங்கர், சதீஷ்குமார், கவுதம் ஆகிய 3 பேரையும் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். படுகாயம் அடைந்த மூன்று பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பாறையடி பகுதியை சேர்ந்தவர்கள் கோட்டையடி பகுதிக்கு சென்று அங்கிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். தகவலறிந்து கோட்டையடி மற்றும் பறையடி பகுதிகளுக்கு சென்ற போலீசார், இருதரப்பை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.

arest

மேலும், இந்த பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா எனவும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய்களை கொண்டு அந்த பகுதிகளில் உள்ள வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனைகளில் நாட்டு வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. அதேசமயம், அந்த பகுதிகளில் இருந்து 4 அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பு மோதலையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் வாசிங்க

மீண்டும் படமெடுக்கும் பாம்பு; கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகமான சினேக் கேம்!