நெல்லையில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்து கைதான 6 பேர் விடுதலை

 

நெல்லையில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்து கைதான 6 பேர் விடுதலை

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக கைது செய்யப்பட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்

நெல்லை: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக கைது செய்யப்பட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தீபாவளி பண்டிகையன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு கால நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்திருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் விதித்த நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அது தவிர மாநிலம் முழுவதும் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக ஏராளமானோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, சேரன்மாதேவியில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக கைது செய்யப்பட்ட 6 பேரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.