நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் 6-ம் நாளான நேற்று வெள்ளி சப்பரத்தில் காந்திமதி அம்பாள் வீதி உலாவந்து பக்தர்களுக்கு தரிசனம்
தந்தார்.
நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 24 ஆம் தேதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் நெல்லையப்பர் சுவாமி மற்றும் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரமும் , தீபாராதனையும் நடைபெற்று வருகிறது. விழாவின் 6-ம் நாளான நேற்று காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
காலை அம்பாள் வெள்ளி சப்பரத்தில் உள் பிரகாரத்தில் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் , இரவு 8 மணிக்கு அம்பாள் வெளி பிரகாரத்தில் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வருதல் நிகழ்வும் நடைபெற்றது. அதனையடுத்து நான்கு ரதவீதியிலும் காந்திமதி அம்மன் சுற்றி வந்து கோயிலை அடைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் நிர்வாக அலுவலர்களும் மற்றும் நெல்லை காவல் துறையினரும் மிகவும் சிறப்பாக செய்து இருந்தனர்.