நெல்லைக் கண்ணன் தனிநபர் இல்லை… சீமான் எச்சரிக்கை!

 

நெல்லைக் கண்ணன் தனிநபர் இல்லை… சீமான் எச்சரிக்கை!

நெல்லைக் கண்ணன் தனிநபர் இல்லை. அவரை கைது செய்ய வேண்டும் என்று கேட்பது அறிவிலித்தனம் என்று நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அமித்ஷா, மோடி பற்றி பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நெல்லைக் கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க தரப்பில் நெருக்கடி தரப்பட்டுள்ளது. அவரை தமிழக போலீசாரும் தேடி வருவதாக கூறப்படுகிறது.

நெல்லைக் கண்ணன் தனிநபர் இல்லை. அவரை கைது செய்ய வேண்டும் என்று கேட்பது அறிவிலித்தனம் என்று நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அமித்ஷா, மோடி பற்றி பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நெல்லைக் கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க தரப்பில் நெருக்கடி தரப்பட்டுள்ளது. அவரை தமிழக போலீசாரும் தேடி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நெல்லைக் கண்ணனுக்கு ஆதரவாக ட்வீட் வெளியிட்டுள்ளார். 
அதில், “பெருமதிப்பிற்குரிய அப்பா தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு சனநாயகத்தின் வழியே பாசிசத்தை கட்டமைக்க முயலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கொடுங்கோல் ஆட்சி முறைக்கெதிரான அறச்சீற்றமே. நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து, மதத்தால் நாட்டை துண்டாட முயலும் பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பதே அப்பேச்சின் நோக்கம். அது வன்முறையைத்தூண்டுவதாக கைது செய்யக்கோருவது அறிவிலித்தனமானது. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தனிநபரல்ல! ஒட்டுமொத்த தமிழர்களின் சொத்து!” என்று கூறியுள்ளார்.