நெதர்லாந்து துப்பாக்கி சூடு சம்பவம் – ஏராளமானோர் படுகாயம்

 

நெதர்லாந்து துப்பாக்கி சூடு சம்பவம் – ஏராளமானோர் படுகாயம்

நியூசிலாந்து சம்பவமே இன்னும் மறக்காத நிலையில், அடுத்ததாக நெதர்லாந்து நாட்டில் நடந்துள்ள துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் இன்று காலை வேலைக்கு செல்ல டிராம் வண்டியில் பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

netherland tram shooting

அப்போது, டிராம் வண்டிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். அதன் பின் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.