நெஞ்சு சளியை இயற்கையான முறையில் குணப்படுத்தும் மருத்துவ குறிப்புகள்

 

நெஞ்சு சளியை இயற்கையான முறையில் குணப்படுத்தும் மருத்துவ குறிப்புகள்

தொடர்ந்து நெஞ்சில் பலருக்கு சளி கட்டிக் கொண்டிருக்கும். இந்த சளித் தொல்லையிலிருந்து விடுபட வழிதெரியாமல் இருப்பார்கள். மருந்து மாத்திரை என்று உட்கொண்டாலும் அடுத்த வாரமே அழையா விருந்தாளியாக திரும்பவும் வந்துவிடும்.

தொடர்ந்து நெஞ்சில் பலருக்கு சளி கட்டிக் கொண்டிருக்கும். இந்த சளித் தொல்லையிலிருந்து விடுபட வழிதெரியாமல் இருப்பார்கள். மருந்து மாத்திரை என்று உட்கொண்டாலும் அடுத்த வாரமே அழையா விருந்தாளியாக திரும்பவும் வந்துவிடும். அப்படிப்பட்டவர்களுக்கான நிரந்தர தீர்வு கைவைத்திய முறைகள் தான். வீட்டு வைத்தியத்திலேயே இதனை சரிசெய்யலாம். இன்னொரு முக்கியமான விஷயம், இது மாதிரியான வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தும் போது, பக்க விளைவுகள் எல்லாம் எதுவும் ஏற்படுவதில்லை. 

leaf

ஆடாதோடா இலை
ஆடா தோடா இலை நெஞ்சு சளியை போக்க ஒரு அரு மருந்தாக இருக்கிறது. ஆடாதோடா இலைத் துளிரை எடுத்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து பருகி வர நெஞ்சு சளி கரையும்.

stem

ஆடாதோடா வேர்
ஆடாதோடா இலை மற்றும் அல்லாமல் அதன் வேரும் இந்த நெஞ்சு சளிக்கு ஒரு அருமருந்தாக இருக்கிறது. ஆடாதோடை செடியின் வேரை இடித்து சலித்து சிறிது தேன் விட்டு சாப்பிட்டு வர நெஞ்சு சளி கரையும்.

lemon juice

எலுமிச்சை சாறு
சிறிது எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். தினமும் காபி, டீ க்கு மாற்றாக இந்த பானம் குடிக்க பழகி கொண்டால் நெஞ்சு சளியே இருந்த இடம் தெரியாமல் போகும்.

pepper

மிளகு
பாலில் மிளகை கலந்து குடிப்பது சளிக்கு மிக மிக நல்லது. இது மிக எளிய முறையாக இருந்தாலும் மிகச்சிறந்த பலனை கொடுக்கும். குடிக்க முடிந்த காரத்திற்கு ஏற்றவாறு மிளகுத் தூளை பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.

orange

ஆரஞ்சு
வைட்டமின் சி நெஞ்சு சளியை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. நெஞ்சு சளி இருக்கும் நேரத்தில் இந்த ஆரஞ்சு பழத்தையும், எலுமிச்சை பழத்தையும் அடிக்கடி எடுத்துக் கொண்டால் நெஞ்சு சளி கரையும்.

dal

துவரம் பருப்பு
நமது வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் துவரம் பருப்பும் மிக முக்கியமானதாகும். இந்த துவரம் பருப்பு, மிளகு, உப்பு மூன்றையும் வாணலியில் வறுத்து பொடி செய்து சுடு சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சு சளி கரையும்.

honey

தேன்
தேன் ஒரு மிகச்சிறந்த இயற்கை கொடுத்த வரமாகும். தேன் சளியை கரைப்பதில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. நெஞ்சு சளி கரைய இரவில் பசும் பாலில் சிறிது மிளகுத்தூள், மஞ்சள் தூள், தேன் கலந்து குடித்தால் நெஞ்சு சளி கரையும்.

tulsi

துளசி
துளசி நமது வீடுகளிலேயே இருக்கும் ஒரு கை கண்ட மருந்தாகும். இந்த துளசி இலைகளை நீரில் கழுவி விட்டு, தினமும் துளசிச் சாரை பருகினால் நெஞ்சு சளி கரையும்.

neli

நெல்லிக்காய்
நெல்லிக்காய் விலை மலிவாகவும், எளிதாகவும் கிடைக்க கூடிய ஒன்று.. நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்.

puthina

புதினா
புதினா இலை (ஒரு கைப்பிடி) மிளகு(3) இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

leaf

வெற்றிலை
வெற்றிலைச் சாற்றில் இரண்டு சொட்டுக்களை காதில் விட்டால் சளி ஒழுகுவது நிற்கும். இது நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த நாட்டு வைத்தியமாகும்.

leaf

இஞ்சி பொடுதலை
இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண மார்பு சளி நீங்கும்.

karupuram

கற்பூரம்
ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கற்பூரம் கரைய ஆரம்பிக்கும். கற்பூரம் நன்கு கரைந்ததும் பாத்திரத்தை இறக்கி விடலாம். சூடான எண்ணையை கையில் பட்டு விடாதவாறு பாதுகாப்பான இடத்தில் ஆர வைக்க வேண்டும்.
வீட்டில் குழந்தைகள் இருந்தால் மிக கவனம். சூடான எண்ணெய் கையில் பட்டால் ஆறுவதும் கடினம், தழும்பும் விரைவில் மறையாது. தேங்காய் எண்ணெய் நன்கு ஆறியதும் அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். சிறிது குணம் தெரிந்தவுடன் விட்டு விட கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் குணபடுத்தி விடலாம்..