நெகிழ வைக்கும் மெஹந்தி சர்க்கஸ் – டிரைலர் விமர்சனம்

 

நெகிழ வைக்கும் மெஹந்தி சர்க்கஸ் – டிரைலர் விமர்சனம்

இயக்குனர் சரவணன் இயக்கும் புதிய படமான மெஹந்தி சர்க்கஸின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.

சென்னை: இயக்குனர் சரவணன் இயக்கும் புதிய படமான மெஹந்தி சர்க்கஸின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.

இயக்குனர் சரவணன் இயக்கும் புதிய படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. சரவணன் ராஜூ முருகனின் சககோதரர் ஆவார். இந்தப் படம் 90 களில் கதை நடப்பதாக காட்டப்பட்டிருக்கிறது. வட இந்தியாவிலிருந்து ஊர் ஊருக்கு சர்க்கஸ் காட்டி பிழைக்கும் ஒரு கம்பெனி தமிழ்நாட்டுக்கும் வருகிறது. இந்த சர்க்கஸ் கம்பெனியில் முக்கிய நபராக இருக்கும் சர்க்கஸ் கம்பெனி முதலாளியின் மகளை தமிழ்நாட்டைச்சேர்ந்த நாயகன் காதலிக்கிறார். ஆனால் நாயகன் விட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் சர்க்கஸ் கம்பெனியை ஊரை விட்டு காலி செய்து விட்டுப் போகும்படி வற்புறுத்துகிறார்கள். காதலியை தேடி காதலன் வட இந்தியா பகுதிக்கு பயணிக்கிறான் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதை படம் சொல்லும்.

Mehandi Circus

படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் மனதை வருடுகின்றன. ‘கோடி அருவி கொட்டுதே..’ என்ற பாடலும் அதை படமாக்கியிருக்கும் விதமும் அருமை. 
இரண்டாவது பாடலாக ‘வெயில் மழையே..’ பாடல் காதலின் பிரிவையும் வட இந்தியாவின் அழகையும் காட்டியிருக்கிறது. கதையும் காட்சிப்படுத்துதலிலும் படம் பிரமிக்க வைக்கிறது. இரண்டாவது பாடலை இயக்குனர் சரவணனே எழுதியிருக்கிறார். 90 களில் வாழ்ந்தவர்களுக்கு இப்போது நினைவுபடுத்தும் விஷயங்களை படங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இது ரசிகர்களைடையே பெரிய வரவேற்பை கொடுக்கும் என்று நம்பலாம். மெஹந்தி சர்க்கஸ் நெகிழவைக்கும் காதல் கதையாக இந்த ஆண்டு அமையும் என்பது உண்மை