நூல் மாதிரி இருந்துட்டு இப்படி நூல் விடுறீங்களே பாஸ்: ராஷ்மிகாவிற்கு மெசேஜ் அனுப்பி ரசிகர்களிடம் வசமாக சிக்கிய மனோ பாலா
கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா. அப்படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தார். இவர் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த ‘டியர் காம்ரேட்’ விரைவில் வெளியாகவுள்ளது.
‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா. அப்படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தார். இவர் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த ‘டியர் காம்ரேட்’ விரைவில் வெளியாகவுள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது தமிழில் ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவரும் மற்ற ஹீரோயின் போல சமூகவலைத்தளத்தில் படு ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் தனது பேன் பேஜ்ஜில் மீண்டும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாகச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த முறை ராஷ்மிகா பேன் பேஜ்ஜில் புகைப்படம் ஒன்று பதிவிட, அது ராஷ்மிகாவின் நிஜ பேஜ் என்று நம்பி பிரபல நடிகர் மனோபாலா ‘எப்படி இருக்கிறீர்கள் ‘ என்று மெசேஜ் செய்துள்ளார். அதை பார்த்த சிலர் ஒரு நடிகராக இருந்து கொண்டு இவருக்கு பேன் பேஜ் எது என்று கூட தெரியாமல் இப்படி நூல் விடுகிறாரே என்று பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.